Monday, October 23, 2017

நம்முடைய கோயில்கள் -4

மூன்றாம் பகுதியின் தொடர்பாக  மேலும் சில  சிந்தனைகள் :

1. இக்கலியுகத்தில் எவ்வளவோ  பிரச்சினைகள், கஷ்டங்கள் ,  இடர்கள் ஆகியவற்றிலிருந்து விடுபடவும் , நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றவும் கடவுளின் உதவியை நாடி அங்கு செல்கின்றோம்.
எவ்வளவுபேர்  <அய்யனே/தாயே   உன்மீது அளவில்லாத பக்தியைக்கொடு > என்று  மனமுருகி நிற்கின்றோம் ? 
2. பக்தியைமட்டும் கேட்டு வாருங்கள். மற்றவைகளை அவனே தீர்த்து  வைப்பான், உங்கள்முயற்சியுடன்.
3.செல்லும் கோவிலைப்பற்றிய ஸ்தல புராண  புத்தகங்கள் வாங்கிப்படியுங்கள்.   விவரங்களை  நம்முடைய  சரித்திரத்துடன்  ஒப்பிட்டு பாருங்கள்.
4.கோவில் கட்டிட அமைப்பு, சிற்பங்கள்,  ஓவியங்கள் ஆகியவற்றை ரசியுங்கள். அவைகள் நம்முடைய   பாரம்பர்யம் எப்படிப்பட்டது எனபதை
பறைசாற்றும்.

தொடரும் 

No comments: