கோவில்கள் பராமரிப்புக்கு நாம் செய்யககூடியவை :
1. பொருளுதவி 2. மற்றவர்கள் செய்யும் காரியங்களில் பங்கு கொள்ளுதல்
3. கோவில்களை தூய்மையாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துதல் .
முதல் இரண்டும் மற்றவர்களை சான்றிருக்கின்றன.
மூன்றாவது தனிப்பட்ட முறையில் நாம் செய்யக்கூடியது என்ன?
1. தூய்மையான உள்ளம் ,உடல்,உடையில் செல்வது:
இந்த நிலையில் உங்கள் உள்ளம் தானாகவே அசுத்தத்தை வெறுக்கும்.
2. மறக்காமல் சுத்தமான ஒரு சிறிய துண்டு
கைகளை துடைக்க கோவில் சுவர்களை தூண்களை நாடாமல் இருக்க உதவும்
3. மறக்காமல் வேண்டிய குடி நீர்
முக்கியமாக வரிசையில் நிற்கும்பொழுது தேவை
4. ஒரு சிறிய காலி பை ( பிளாஸ்டிக் பை இல்லை)
தேவையற்ற காகிதம் முதலியவைகளை கோவில் உட்புறங்களில் போடாமல் இந்த பையில் போட்டு வையுங்கள். வெளியில் சென்ற பிறகு குப்பை தொட்டியில் சேர்த்து விடுங்கள்.
5. ஒரு தட்டு பூஜை சாமான்களுக்காக
பிளாஸ்டிக் பை உபயோகிக்காதீர்கள்.
6. சிறுவர்களுடன் செல்லும்பொழுது தேவையான wiping paper
உங்களுக்கும் இது மிகவும் தேவை
7.ஒரு சிறிய கிண்ணம்
ப்ரசாதங்கள் வாங்கிக்கொள்ள . கோவிலுக்குள் சாப்பிட வேண்டாம் 8. அர்ச்சனைக்காக பெயர்,நக்ஷத்ரம், கோத்ரம் குறிப்புகள்
அர்ச்சகரின் நேரத்தைக்குறைக்கும் . இந்த குறிப்புகளை நீங்கள் மனதில் வாங்கிக்கொண்டு அர்ச்சகர்மூலம் அங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வத்தின் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள்.
9. கோவிலில் தேங்காய் உடைப்பது அல்லது சந்நிதியில் அர்ச்சகர் மூலம் தேங்காய் உடைப்பது தேவை இல்லாத ஒன்று என்பது அடியேனுடைய அபிப்ராயம். வேண்டுதல் அப்படி என்றால் தேங்காயை
இல்லங்களில் உடைத்துக்கொண்டுவந்து கோவிலில் சமர்ப்பியுங்கள்.
10.தயவு செய்து கோவிலில் விளக்கு ஏற்றி அங்கேயே வைப்பதை தவிர்க்கவேண்டும். கோயிலில் எண்ணெய்ப்பசை தங்குவதை விரும்பாதீர்கள். உங்கள் வேண்டுதல் அப்படியாக இருந்தால் தங்கள் இல்லங்களிருந்து சுத்தமான விளக்கு ,நெய் , திரி கொண்டுவந்து விள க்கேற்றி , திருப்பி எடுத்து செல்லுங்கள்.
இன்னும் எவ்வளவோ உங்கள் மனதிலும் இருக்கலாம். அவற்றை இங்கு பதிவு செய்யுங்கள்.
மேற்கண்டவை சில என்னுடைய அபிப்ராயமாக இருந்தாலும் , பலவற்றை சில உபன்யாசகர்கள் சொல்லக்கேட்டு இங்கு பதித்திருக்கிறேன்.
தொடரும்
No comments:
Post a Comment