Saturday, November 18, 2017

நம்முடைய கோவில்கள்-5

சில நாட்களுக்குமுன்பு  திருவரங்கன் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது. ஸ்ரீபாஷ்யக்காரர் சந்நிதிக்கும் சென்றோம்.  சந்நிதிக்கு ஏதிரில்  ஒரு பாகவ தோத்தமர்  சில பாசுரங்கள் சேவித்து அதற்கு வ்யாக்யானமும்  சொல்லிக்கொண்டிருந்தார். பக்தர்களும் மிக பக்தியுடன் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். இதை  பார்த்து எனக்கு சில எண்ணங்கள் தோன்றின.
1. பரந்து விரிந்து கிடக்கும்  மண்டபங்கள், பிரகாரங்கள் சிலமணி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் உப்யோகப்படுத்தப்படுவதில்லை  .
2. சுமார் காலை 11 மணிக்கு மூடப்படும் கோவில் மாலை 4 மணிக்கு திறக்கப்படுகின்றன.
3.மண்டபங்கள் , பிரகாரங்களை சமூகத்தின் ஆன்மீக காரியங்களுக்காக பயன்படுத்தலாம்
4. காலை ,பிற்பகல், மாலை நேரங்களில் ஆன்மிக பாசுரங்கள், தேவார, வழிபாடு பற்றிய வகுப்புக்கள் நடத்தலாம்.
5. ஆன்றோர்கள்,சான்றோர்கள் ஆன்மிக உறை யாற்றலாம்.
6. உபன்யாசங்கள் தனியார் கல்யாண மண்டபங்களிருந்து கோவில் மண்டபங்களை நோக்கி வரலாமே.
7.தமிழ் மற்றும் சமஸ்க்ரித வகுப்புக்கள் நடத்தலாம்  இரண்டு மொழிகளும் ஆன்மீகத்தின் இரு கண்கள்.
8.கோவில் இருக்கும் ஊர், கோவில்கொண்டிருக்கும் ஆண்டவன் பற்றிய
வரலாற்று காட்சியகங்களை ஏற்படுத்தலாம் .
9. கோவில்கள் சரியான முரையில் உபயோகப்படுத்தப்பட்டால் நல்ல சமூக மாற்றத்தையும் கொண்டுவர முடியும்.

இன்னும்  எவ்வளவோ !